Thursday, November 26, 2009

ஒரு அட்சய பாத்திரம் பற்றி...

இவ்வுலகம் வியந்து பார்க்கும் விசயங்களில் இன்னுமொன்று
- வைரமுத்து -
அந்த ஆழ்கடலில் ஆர்பரிக்கும் கவிதைகளை ரசித்து, மயங்கி கிடக்கும் கரையில் நானும் ஓர் மண் துகள்.




தமிழன்னை பெற்றெடுத்து,
இலக்கியம் தத்தெடுத்த வைரவா
உன் வாழ்வில்
நீ அறியா சில ரகசியங்கள்
உன் ரசிகன் சொல்கிறேன் கேள்.

நிறை மாத கருவாய் நீ,
நிறை மாத கர்பிணியாய் உன் தாய்,
வயிற்றில் தீராத கூசலை
என்னவென்று சோதித்தாள் -
அவளின் கற்பபை சுவர்களெல்லாம்
நீ கவிதைகளை கிறுக்கி கொண்டிருந்தாய்.

புதையல் என்றால்
புவியுள்தான் என்றிருக்க
நீ மட்டும் கருவழி வந்தாய்.

இவ்வுலகில்
இரண்டு நிலாக்கள்
இரண்டு சூரியன் உண்டென்பேன்
நிரூபிக்க வேண்டுமெனில்
உன் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு
நீயே நின்று பார்.

இதுவரை
தீ மட்டும்தான் சுடும் என்றிருந்தேன்,
உன் கவிதைகள் காணும் வரை.

பனித்துளியின் தலையில்
மின்னல் நட்டு வைக்கிறாய்..
பூமி பந்திற்கு நிலவை பொட்டு வைக்கிறாய்
மேகம் குளிர வானம் போர்துகிறாய்.
கவிதை பாத்திரத்தில்
பிரபஞ்சமே சமைக்கிறாய்.

நீ முற்று புள்ளி வைத்த
இடங்களெல்லாம் கொட்டிக்கிடக்கிறது
விஞ்ஞானமும், மெய்ஞானமும்.

உன் காலங்களில் வாழ்வதனால்
என் பிறவிகூட அர்த்தப்படும்.

இன்று
உனை படைத்த பிரம்மனே
உன்னை நோக்கி தவம் இருக்கிறான்.
அவன் காதலிக்கு தர
உன் கவிதை ஒன்று வேண்டுமாம்.
மறுக்காமல் வரம் கொடு.

.

8 comments:

அகல்விளக்கு said...

மிக நல்ல நயம் கண்படுகிறது.

இதுபோன்ற கவிதைநயம் நிறைய பேருக்கு வாய்ப்பதில்லை...

நிறைய எழுதுங்கள் தோழரே...

கமலேஷ் said...
This comment has been removed by the author.
Ashok D said...

//பனித்துளியின் தலையில்
மின்னல் நட்டு வைக்கிறாய்..
பூமி பந்திற்கு நிலவை பொட்டு வைக்கிறாய்...
மேகம் குளிர வானம் போர்துகிறாய்...//

பிடித்த வரிகள் :)

விஜய் said...

எனக்கும் வைரமுத்து நிரம்ப பிடிக்கும். அழகா எழுதியிருக்கீங்க. அதுவும் அந்த கூசல் ரொம்ப சூப்பர்.

வாழ்த்துக்கள்

விஜய்

அன்புடன் மலிக்கா said...

அழகிய வரிகளில் மிளிர்கிறது மொட்டு கவிதை..

தொடர்ந்து எழுதுங்கள்

கமலேஷ் said...

நன்றி மல்லிகா மற்றும் விஜய்

பூங்குன்றன்.வே said...

//பனித்துளியின் தலையில்
மின்னல் நட்டு வைக்கிறாய்..
பூமி பந்திற்கு நிலவை பொட்டு வைக்கிறாய்...
மேகம் குளிர வானம் போர்துகிறாய்...

கவிதை பாத்திரத்தில்
பிரபஞ்சமே சமைக்கிறாய்..//

ரொம்பவும் ரசித்த வரிகள்..இயல்பான நடை.அருமை!!!

திவ்யாஹரி said...

நிறை மாத கருவாய் நீ,
நிறை மாத கர்பிணியாய் உன் தாய்,
வயிற்றில் தீராத கூசலை
என்னவென்று சோதித்தாள்....

அவள் கற்பபை சுவர்களெல்லாம்
நீ கவிதைகளை கிறுக்கி கொண்டிருந்தாய்...

எவ்வளவு அழகான வரிகள்.. நீங்க பின்னூட்டமிட்டதற்கு அளவிலா பெருமிதம் எனக்கு..